அனுமாரும் அணிலாரும்
அனுமாருக்கும் வாலதிகம்
அணிலாருக்கும் வாலதிகம்
அதனால்தான் ராமாயணத்தில்
அவ்விருவருக்கும் பேரதிகம்
அனுமார் அரிய பணி செய்தார்
அணிலார் ஆன பணி செய்தார்
ஆனால் ராமர் இருவரையும்;
அகிலம் புகழும்படி செய்தார்!
புலி ஆடு புல்கட்டு
புலி ஆடு புல்கட்டு
மூணையும் படகில் ஏற்றிக்கிட்டு
ஆற்றைக் கடக்கணும் வெங்கட்டு
ஆனா படகிலே இடத்தட்டு
புலிஆடுபுல்கட்டு
எதுவோ ரெண்டை இட்டுகிட்டு
போனா இல்லே இக்கட்டு
போட்டான் திட்டம் வெங்கட்டு
ஆட்டையும் புலியையும் விட்டுட்டு
அங்கட்டுப் போனா இங்குட்டு
ஆட்டை வரிப்புலி தின்னுப்புடும்!
ஆட்டையும் புல்லையும் வெச்சுட்டு
அங்குட்டுப் போனா இங்குட்டு
ஆடு புல்கட்டை மேஞ்சப்புடும்
இங்குட்டுப் புல்கட்டை வெச்சுட்டு
ஆட்டையும் புலியையும் இட்டுகிட்டு
ஆற்றைக் கடந்தான் வெங்குட்டு
அங்குட்டுப் புலியை விட்டுட்டு
கட்டை மட்டும் இட்டுகிட்டு
இங்குட்டு வந்தான் வெங்குட்டு
இப்போ ஆடு புல்கட்டு
ரெண்டையும் படகில் ஏற்றிகிட்டு
ஆற்றைக் கடந்தான் வெங்குட்டு!
புலிஆடுபுல்கட்டு
மூணையும் ஊர் கொண்டு சேர்த்துட்டு
படகைத் துறையிலே கட்டிட்டு
பசிச்சுச் சாப்டான் வெங்குட்டு!
படுக்கப் போனானோ எங்குட்டு?
லெமன்
LEMON has dished out two recepies (rhymes) in his own flavour.
ReplyDelete- PRAbAKARAN, Writer.